கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் திடகன் குடி மக்களின் திருவிழா

கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்றதும், ஆலய மகோற்சவத்தினை தேரோட்டம் என அழைக்கின்றதுமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்று(06) வெள்ளிக்கிழமை திடகன் குடி மக்களின் உபயத்துடன், பூசை ஆராதனைகள், சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருதல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

கடந்த 01ம் திகதி திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவமானது எதிர்வரும் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டையும் இடம்பெற்று மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் நடைபெற்று உற்சவம் நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.