பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வு தகவலுக்கு அமைய குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நுவரெலியா, ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சிப் பெற்றவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.