10பேர் பலி : மட்டக்களப்பில் சோகம்

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மட்டக்களப்பினை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் பெரும்சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஒரு இரட்டைக்குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளமை மட்டக்களப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த விபத்தில் மட்டக்களப்பு,கல்லடி புதிய டச்பார் இன்னாசியார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வீட்டில் இருந்துசென்ற ஜுட் ஹென்றிக்(48வயது)அவரது மனைவி கிறஸ்ன்டா ஹென்றி(42வயது)அவரர்களது மகன் ஜு.ஹெய்ட்(19வயது),மகள் ஷெரேபி(10வயது)ஆகியோரும் கருவப்பங்கேணி முதலாம் குறுக்கு வீதியை சேர்ந்த லிஸ்டர்(34வயது)அவரது மனைவி நிசாலி(27வயது)அவர்களது இரட்டைக்குழந்தைகளான மூன்று வயதுடைய பைஹா,ஹனாலி ஆகியோரும் இவர்களின் மனைவி நிசாலியின் தாய்தந்தையரான ரெலிங்டன் ஸொப்ஸ்(56வயது),செல்pபியா(53வயது)ஆகியோர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் நிசாலியின் குடும்பத்தினை சேர்ந்த அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில் ஜுட் ஹென்றிகின் ஒரு மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றபோதே இந்த விபத்து சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 12பேர் சென்றுள்ளதாகவும் 10பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு குடும்பங்கள் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு பிரதேசத்த்தினை சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.