கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாள் இரவு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, 50 ஆவது நாளில் பதவியை விட்டு விலகியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்காத- அலரி மாளிகையில் வசிக்காத – மேன்முறையீட்டு நீதிமன்றினால், பிரதமராக செயற்பட முடியாமல் தடுக்கப்பட்ட பிரதமராக மகிந்த ராஜபக்ச இந்த 50 நாட்களையும் கழித்துள்ளார்.