திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதுார் கிழக்கு பழங்குடி மக்கள் தமது பல்வேறு பிரச்சனைகளை நிறைவேற்றக்கோரி ஆர்பாட்டமொன்றை ஞாயிற்றுக்கிழமை மூதுார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வீரமாநகரில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்..
இதற்கான ஏற்பாட்டை மூதுார் கிழக்கு பழக்குடி மக்களின் அமைப்பு ஏற்பாடுசெய்துள்ளதாக அதன் தலைவர் கே.கனகசிங்கம் தெரிவித்தார்.
பாட்டாளிபுரத்தில் படையினர் வைத்துள்ள காணிகளை விடுவிக்க கோரல், பாட்டாளிபுரம்,வீரமாநகர்,நல்லுா
குறித்த கிராமங்களில் வாழும் பழங்குடி மக்கள் மிகவும் வறுமைப்பட்டவர்கள் என்பதுடன் வாழ்வாதாரங்கள் இன்றி சிரமப்படுவபவர்கள் என்பதுடன் 2006 ஒகஸ்டில் முற்றாக இடம்பெயர்ந்து மீழ்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் முறையான உதவி நடவடிக்கைள் பூரணப்படுத்தப்படாமல் உள்ள பகுதி என்பதனால் மக்கள் பெரும் துயரப்படவதாகவும் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.