( வாஸ் கூஞ்ஞ)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மக்களுக்கு காணி உறுதிகள் வழங்குவதற்காக மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டார் அத்துடன் மன்னார் மறைமாவட்ட ஆயரையும் மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.
நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க ஞாயிற்றுக் கிழமை (16) காலை மன்னாருக்கு விஐயத்தை மேற்கொண்டார்.
மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்.
இச்சந்திப்பின்போது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மன்னார் குரு முதல்வர் பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் மற்றும் முன்னாள் மன்னார் குரு முதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அடிகளார் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து நாடலாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் நகர சபை மண்டபத்தில் மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இத்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 5000 காணி உறுதிகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படடிருக்கும் நிலையில் அவற்றில் தற்பொழுது 442 உறுதிகள் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் இவ்விடத்தில் விவசாயிகளுக்கான கடன் திட்டமாகவும் மற்றும் காப்புறுதிக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஜனாதிபதி , ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தலைவர் காதர் மஸ்தான் , வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் , மாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன் . றிசாட் பதியூதின் , திலீபன் , அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உட்பட அரச திணைக்கள உயர் அதிகாரிகள் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமர்வில் மன்னார் தீவில் கனியவள மணல் அகழ்வு , மின் காற்றாலை அமைப்பது தொடர்பாகவும் , மடு பெருவிழாவை முன்னிட்டு மடு வீதியிலிருந்து மடு ஆலயம் வரை யானையின் பாதுகாப்பிலிருந்து வீதியின் ஓரங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் துப்பரவு செய்யும்போது வன இலாகா பகுதினர் தடை செய்து தொழிலாளர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவது தொடர்பாக மற்றும் விவசாய தொடர்பாக போன்ற பல விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.