காரைதீவில்  இடம்பெற்ற கலாசார விளையாட்டு விழா!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 41 வது வருட நிறைவை முன்னிட்டும்,  குரோதி புத்தாண்டு வருட பிறப்பை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டு கழகமும்,  விபுலானந்தா சனசமூக நிலையமும் இணைந்து நடத்தும் 26 வது மாபெரும்  கலாச்சார விளையாட்டு விழா கடந்த  சனிக்கிழமை (20) காரைதீவில் கோலாகலமாக நடைபெற்றது.
காரைதீவு விளையாட்டு கழகத் தலைவர் ரொட்டரியன் விஜயரெத்தினம் விஜயசாந்தன்  தலைமையில் காரைதீவு விபுலானந்தா மைதானத்தில் நடைபெற்ற கலாச்சார விளையாட்டு விழாவில் பிரதம அதிதியாக, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்  கலந்து சிறப்பித்தார்.
சீர்பெறு அதிதியாக  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன்   கலந்து சிறப்பிக்க,
 முதன்மை அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர்
சிவ. ஜெகராஜன் மற்றும் ஏனைய அதிதிகளாக வைத்திய அதிகாரிகளான டாக்டர் பி.சுரேஸ்குமார் ,டாக்டர் க.ஹரிஷானந்த், போசகர்களான வி.இராஜேந்திரன், விரி.சகாதேவராஜா மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
 இந்த நிகழ்விலே விசேடமாக காரைதீவு விளையாட்டு கழகத்தின் 40 வருடகால வரலாற்றை உள்ளடக்கிய “விபுலவிருட்சம்” KSC @40 என்ற சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது . கழகத் தலைவர் விஜயசாந்தன், பிரதம அதிதி செயலாளர் மகேசனிடம் முதல் பிரதியை வழங்கி வைத்தார்.
அத்துடன் 27 கல்வித்துறை சாதனையாளர்கள் (ஓல் 9 ஏ மற்றும் ஏஎல் 3 ஏ பெற்ற)பெற்றோர்  சகிதம் மைதானத்தின் மத்தியில் வைத்து பகிரங்கமாக கௌரவிக்கப்பட்டார்கள். கழகத்தின் முன்னாள் தலைவர்களும் விசேட கௌரவம் மற்றும் விபுலவிருட்சம் நூலும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கழக செயலாளர் எஸ்.கிரிசாந்த் நன்றிகள் தெரிவித்தார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

IMG-20240421-WA0189.jpgIMG-20240421-WA0196.jpgIMG-20240421-WA0191.jpgIMG-20240421-WA0190.jpg