கல்முனை கார்மேல் பற்றிமாவில் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா.

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின்  பெண்கள் பிரிவில்  கனிஷ்ட மாணவத்தலைவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கனிஷ்ட மாணவத்தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் நேற்றுமுன்தினம் (02) செவ்வாய்க்கிழமை  கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ச.இ. றெஜினோல்ட் எவ்.எஸ்.ஸி. தலைமையில் சிறப்பாக நடைபெற்றது..
பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் ( திருமதி) எஸ்.சதாநாதன் கலந்து சிறப்பித்தார்.
ஏனைய அதிதிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.