(வி.ரி.சகாதேவராஜா) ஊர்வலம் ஊர்வலமாக பொதுமக்கள் வந்து போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால் கல்முனை தமிழர் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
நேற்று (3) புதன்கிழமை பத்தாவது நாளாக அப் போராட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடைபெற்றது.
சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பது தொடர்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலிலும் கொதிக்கும் தார் வீதியில் தமது யதார்த்தங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளுடன் நடைபவனியாக சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வந்து கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் முன்பாக அமர்ந்திருந்து மக்கள்போராட்டத்தில் கலந்துகொண்டமை ஏனைய மக்களையும் உணர்ச்சி வசப்படுத்திய து.
நேற்றுமுன்தினம் 9 வது நாள் போராட்டத்திற்கு பாண்டிருப்பு பொதுமக்கள் பெரும் ஆதரவு நல்கினர்.