திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் மகாதேவ தேசிக சுவாமிகள் பங்கேற்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் மகாதேவ தேசிக சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டனர்.

மகாதேவ தேசிக சுவாமிகளின் தெய்வீக சொற்பொழிவு இடம்பெற்றது.

கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த 02 ஆம் திகதி முதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்சியாக தினமும் மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன.

பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.