ராஜாங்க அமைச்சர் வியாளேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகமல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், செங்கலடி பிரதேச செயலாளரும் சட்டப்படி தமது கடமைகளை புரியுமாறு கோரி சவப்பெட்டிகளுடன் அமர்ந்து இருஇளைஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தினைசெங்கலடி பிரதேச செயலகம் அருகில் ஆரம்பித்துள்ளனர்.
கல், மண், கிறவல் என்பவற்றுக்கு சட்டப்படியான ஆவணம் இருந்தும் ராஜாங்க அமைச்சர்வியாளேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ராஜாங்க அமைச்சர்வியாளேந்திரனை ஏறாவூர் பற்று பிரதேச தலைவர் பதவியில் இருந்து அகற்றுமாறும் இப்போராட்டம் நடைபெறுகிறது