ரோட்டரி இலங்கை மாவட்ட – 3220 ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் 04-02-2024 அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.
ஆளுநரின் செயலாளர் வேலுப்பிள்ளை ரமணா உதவி.ஆளுநர் ரோய் சத்தியசுதாகர் அவர்களும் அவருடன் இணைந்து கொண்டார்கள்..
திருகோணமலை ரோட்டரி ரோட்டரி கழகத்தின் தலைவர் வைத்திய கலாநிதி எஸ்.சௌந்தரராஜா அவர்கள் ஆளுநர் மற்றும் அதிதிகளை வரவேற்றார். செல்வ இசை நடன சபா மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடினர்.
செயலாளர் என்.டி. ரகுராம் 2023ரூ ஜனவரி 2024 வரையிலான செயல்பாடுகள் பற்றி சுருக்கமான விளக்கத்தை அளித்தார்.
திரு.விஹ்ராஜ் சௌந்தரராஜா ஒரு அழகிய பாடல் மூலம் இசையை வழங்கினார்.
தகுதியான 4 குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. . தி/ இறால்குழி கஜமுஹா வித்தியாலய அதிபரிடம் பயிற்சிப் புத்தகங்கள் கையளிக்கப்பட்டன. ஸ்கை ரூட் டிராவல்ஸ் நிதியுதவியுடன் செவித்திறன் குறைபாடு சிகிச்சைக்காக திரு.மருதையா நகுலேஸ்வரனுக்கு ரொக்க நன்கொடை Rs. 250,000/= வழங்கப்பட்டது.
எங்கள் ரோட்டரி கழக பராமரிப்பாளர் திரு.மருதுவின் முழுமையடையாத வீட்டை பழுதுபார்ப்பதற்காக ரூ. 45000.00 உதவி வழங்கப்பட்டது கே.கே கிச்சன் நிதியுதவி செய்தது.
ஆளுநர் ஜெரோம்ராஜேந்திரம் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் தரமான இளம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
2024-2025 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட திரு.எஸ்.ஜெகதேஸ்வரன் நன்றியுரை நிகழ்த்தினார்.