கும்புறுமூலையில் உள்ள தோனாவில்   திடிரென இறப்பு மீனவர்கள் கவலை.

(க.ருத்திரன்) வாழைச்சேனை பிரதேச செயலளர் பிரிவின்  கும்புறுமூலையில் உள்ள தோனாவில் காணப்பட்ட மீன்கள் திடிரென இறந்து காணப்பட்டுள்ளதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.
நேற்று திங்கள் கிழமை மாலை முதல் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.இதன்போது தோணவில் காணப்பட்ட கோல்டன்,செத்தல்,மணலை,கொடுவா  போன்ற பல மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளதாக கவலை தெரிவித்தனர்.குறித்த தோனாவில் உள்ள நீரில் இரசாயன பதார்த்தம் கலந்தமையினால் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கவலாம் என பிரதேச வாசிகள் ஊகம் தெரிவித்தனர்.
இவ்வாறான சம்பவம் இதுவரை காலமும் இப் பிரதேசத்தில் இடம்பெறவில்லையெனவும் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்கு  வாழைச்சேனை பொதுசுகாதார பரிசோதகர்கள்,கோறளைப்பற்று பிரதேச செயலக அனர்த்த முகாமை உத்தியோகத்தர்கள், கடல் தொழில் அபிவிருத்தி  உத்தியோகத்தர், மற்றும்  கல்குடா பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்காக கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.