கிண்ணியா பிரதேச  கலை இலக்கிய விழா.

(அ . அச்சுதன்)   கிண்ணியா பிரதேச கலை இலக்கிய விழா  (2023) நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று  (17) நடைபெற்றது.

கிண்ணியா பிரதேச செயலகமும் பிரதேச அதிகார சபை இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது .கிண்ணியா பிரதேச செயலாளரும் கலாசார அதிகார சபையின் தலைவருமான எம்.எச்.முகம்மது கனி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பல்வேறு இலக்கியம் சார்ந்த மற்றும் சீனடி கலை  நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கலாபூசணம் பெற்ற எழுத்தாளர்களான பி.ரீ.அஸீஸ்,அ.கௌரிதாசன்,ஐதுரூஸ்.ஏ.ஹசன் மற்றும் கலாநிதி கே.எம்.எம்.இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வில் கிண்ணியா  அல் இக்ரா வித்தியாலய  மாணவர்களின் ஹஸீதா அபிநயமும்,ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலய மாணவிகளின் பரத நாட்டியமும்,கிண்ணியா பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜிப் வரவேற்புரையும்,கிண்ணியா பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி அவர்களின் தலைமையுரையும்,பி.எம்.றெக்கீஸின் இஸ்லாமிய கீதமும் ,கவிஞர் அ.கௌரிதாசனின்  கவிதையும்,இன்ஹாம் குழுவின் சீனடி மற்றும் வாள்  சமரும்,2023ஆம் ஆண்டு திறந்த பிரிவு கலை இலக்கிய போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள்  இதன்போது வழங்கி வைக்கப்  பட்டன.

கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர் ற.தனூசியாவின் பாடலும்,மகமாறு சீனடி சங்கத்தின் கிண்ணியாவின் பாரம்பரிய கலையான சீனடியும், ஏ.எஸ்.நஸீர் மற்றும் சாதிக் ஆசிரியர்களின்  பாடல்களும்,கிண்ணியாவின்  கலை வளர்ச்சி பற்றி  கிண்ணியா பிரதேச அதிகார சபையின் ஆலோசகரும் ஓய்வு நிலை அதிபருமான எம்.ஏ.அக்பர் சலீம் உரையாற்றினார்.இதனையடுத்து பாடகரும்  ஆசிரியருமான ஏ.எம். றிஸ்வானின்  பாடல் ஒன்றும்  இடம் பெற்றதோடு, இறுதியாக கிண்ணியா பிரதேச செயலக கலாசார  அபிவிருத்தி உத்தியோகத்தரும் பிரதேச அதிகார சபையின் ஒருங்கிணைப்பாளருமான ஜே.எம்.ஹில்மி  நன்றியுரையாற்றினார்.

இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார அதிகார சபையின் தலைவருமான எம்.எச்.முகம்மது கனி, கலாபூசணம் பெற்ற எழுத்தாளர்கள்,பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்.ஐ.முஜீப்,நிர்வாக கிராம  உத்தியோகத்தர்.ஏ.ஆர்.நிஜாம்தீன்,கலாசார அதிகார சபையின்  ஒருங்கிணைப்பாளரும் கலாசார  அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஜே.எம்.ஹில்மி,அதிகார சபையின் செயலாளர் எம்..ரீ. சஜாத்,உப செயலாளர்.எம்.ஏ.முகமட்,ஆலோசகர் எம்.ஏ.அக்பர் சலீம்,எம்.எம்.எம்.தௌபீக் ஆசிரியர்,முன்னாள் ஆசிரிய ஆலோசகர்  எம்.எச்.எம்.ஹசன்,ஆசிரியரும் எழுத்தாளருமான சபீனா வைத்துள்ளா,ஆசிரிய வளவாளர்.ஆர்.எம்..சதாத் ஞஆகியோர் கலந்து கொண்டு  திறந்த போட்டி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்குபற்றியோருக்கு  பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.