( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்
புதன்கிழமை (6.12.2023) முற்பகல் 11.30 மணியளவில் மன்னார் பதில் மாவட்டச் செயலாளர் திரு.பரந்தாமன் அவர்களின் முன்னிலையில் இவர் தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்
தற்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பதவியேற்றுள்ள மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் கடந்த 12 வருடங்கள் மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார்.
நானாட்டான் பிரசே செயலாளராக கடமையாற்றிய நிலையிலேயே இவர் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பதவியேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)