(கனகராசா சரவணன்) காத்தான்குடி பிரதேசத்தில் போதைபொருள் மொத்த விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல போதை பொருள் வியாபரி மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உட்பட 4 பேரை 120 கிராம் ஜஸ் போதை பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்து காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கிழக்கு பிராந்திய சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகனவின் ஆலோசனைக்கமைய உதவி பொலிஸ்மா அதிபர் என்.பி.லியனகே, மற்றும் சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் அமல்.ஏ.எதிர்மன்ன ஆகியோரின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் ஷகி உட்பட்ட குழுவினர் சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காத்தான்குடியில் கராச் ஒன்றின் முதலாளியும் போதை பொருள் வியாபாரியை 10 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசணையைடுத்து பிரதான வியாபாரியான காத்தான்குடியைச் சேர்ந்த பாயிஸ் என்பவரையும் அவரது உதவியாளர் உட்பட இருவரையும் பகல் 12 மணியளவில் காத்தான்குடியில் உள்ள வீதி ஒன்றில் வைத்து மடக்கிபிடித்ததுடன் பாயிசிடம் இருந்து 72 கிராம் உதவியாளரிடமிருந்து 13 கிராம் உட்பட 85 கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டனர்.
இதனை தொடர்ந்து பிரதான வியாபாரியான பாயிஸ் இடமிருந்து வியாபாத்துக்காக போதைபொருளை வாங்கி கொண்டு சென்ற காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வவுணியாவைச் சேர்ந்த இளைஞரான பொலிஸ் கான்ஸ்டபிளிடம் பாயிஸ் ஊடாக பொலிசார் தொடர்பு கொண்டு போதை பொருளை காத்தான்குடி பிரதேசத்திலுள்ள இடம் ஒன்றிற்கு கொண்டுவருமாறு தெரிவித்து அங்கு மாறு வேடத்தில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா.;
இதன் போது குறித்த இடத்திற்கு பொலிஸ் கான்ஸடபில் ஜஸ் போதை பொருளுடன் சென்ற நிலையில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிசார் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 25 கிராம் ஜஸ் போதை பொருளை கைப்பற்றினர்.
இதில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த சான்று பொருள்களான கைப்பற்றப்பட்ட 120 கிராம் ஜஸ் போதை பொருளுடன் காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.