சரியாக தமிழ் பேச முடியாது நான் தமிழை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்

ஊடகர்களின்  2ம் மொழிக் கற்கை சான்றிதழ் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராய்ச்சி

ஹஸ்பர்_
சரியாக என்னால் தமிழ் பேச முடியாது இதனை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தெரிவித்தார்.

திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (23)இடம் பெற்ற இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த  பிரதேச ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர் வெருகல் பிரதேச மக்கள் என்னை சந்திக்க மாவட்ட செயலகம் வந்த நிலையில் கோபமாக இருந்தனர் பிறகு ஊர் என்ன? பேர் என்ன என வினவினேன் அதன் பிறகு கோபம் தீர்ந்தது ஏனென்றால் தமிழ் பேசும் மக்கள் அவர்கள் இவ்வாறாக நானும் தமிழை திறம்பட கற்க வேண்டும் பேச வேண்டும் என ஆசைப்படுகிறேன் .இது போன்ற நிகழ்வுகள் உண்மையிலேயே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு என குறிப்பிட்ட அவர் இதனை ஏற்பாடு செய்த எழுத்தாணி கலைப்பேரவையினரை பாராட்டினார்.
தமிழ்,சிங்களம் என 150 மணித்தியாலங்கள் இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த 44 ஊடகர்கள்,இளம் ஊடக ஆர்வலர்கள் இதன் போது சான்றிதழ்களை பெற்றனர்.
இதில் கௌரவ விருந்தினராக திருகோணமலை மாவட்ட ஊடகவியலார்கள் சங்க தலைவர்  பொ.சச்சிவானந்தம் மற்றும் தேசிய மொழிக் கல்வி பயிற்சி நிறுவன உதவி பணிப்பாளர் திருமதி பி.பி.ரவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்