(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் இருந்து கனணிகளை திருடிச் சென்ற இரண்டு இராணுவச் சிப்பாய்கள் உட்பட 3 பேரை வெலிகந்தை வீதி சோதனைச்சாவடியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலையில் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 5 களணிகள் 80 மின்விளக்குகளை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் 2019 ம் ஆண்டு உயிர்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இராணுவம் பெறுப்பேற்று பாதுகாப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டுவந்த நிலையில் கடந்த கொரோனா சிகிச்சை மத்திய நிலையமாக அதனை மாற்றி செயற்பட்டு வந்ததுடன் இது இராணுவ பாதுகாப்பில் இருந்துவருகின்றது
இந்த நிலையில் குறித்த கம்பஸ் காவல் கடமையாற்றி வந்த இரு இராணுவத்தினர் கடமை நேரத்தில் அங்கிருந்த 5 கனணி மற்றும் 80 மின் விளக்குகளை திருடி அவைகளை பாசல் செய்து வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இருவரும் கடமையில் இருந்து லீவில் வீட்டுக்கு சென்று லீவு முடியும் முன்னர் கம்பஸ்க்கு தஜரும்பி சம்பவதினமான இன்று அதிகாலை முச்சக்கரவண்டி ஒன்றில் பாசல் செய்து வைத்திருந்த கனணி மற்றும் மின்விளக்குகளை திருடிக் கொண்டு பிரயாணித்த நிலையில் வெலிகந்தை வீதிசோதனைச் சாவடியில் பொலிசார் குற்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்டபோது திருடிக் செல்வதை கண்டுபிடித்த பொலிசார் இரு இராணுவச் சிப்பாய்கள் முச்சக்கரவண்டி சாரதி உட்பட 3 பேரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரும் வெள்ளவாய குருநாகலைச் சேர்ந்தவர்கள் எனவும் இந்த பல்கலைக்களகத்தில் இராணுவம் பெறுப்பேற்ற பின்னர் பல இலச்சம் ரூபா பெறுமதியான இலத்திரணியல் பொருட்கள் திருட்டுப்போயுள்ளதாக பல்கலைகழக முகாiமையாளர் பொலிஸ் நிலையத்தில் 5 முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.