பவுஸர் விபத்தில் ஆறு வயது சிறுவன் பலி; பவுஸருக்கு தீ வைப்பு!

(கனகராசா சரவணன்,எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் தண்ணீர் பவுசர் வாகனத்தில்  சிக்கி  6 வயது சிறுவன் ஒருவன் இன்று சனிக்கிழமை (29) இரவு 6.30 மணிக்கு உயிரிழந்ததையடுத்து  அங்கிருந்து தப்பி ஓடிய சாரதி உதவியாள் இருவரையும்மடக்கிபிடித்த பொதுமக்கள் தண்ணீர் பவுசர் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

ஓமனியாமடு 2ம் பரம்பரை பகுதியைச் சேர்ந்த முகமட் சலீம் முகமட் ருஷ்கி என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இதுபற்றிதெரியவருவதாவது

குறித்த பிரதேசத்திலுள்ள மண் களஞ்சியப்படுத்தும் (யாட்டிற்கு) மண்ணை கழுவுவதற்காக தண்ணீர்; பவுஸ் மூலம் கொண்டு சென்று தினமும் வழங்கிவரும் நிலையில் சம்பவதினமான இன்று இரவு  6.30  மணியளவில் ஓமனியாமடு 2ம் பரம்பரை பகுதி வீதியில் தண்ணீர் பவுசரை வீதியில் பின்புறம் நோக்கி றிவேஸ் எடுக்கும் போது 10 வயது அண்ணன் தனது 6 வயது தம்பியை துவிச்சக்கரவண்டி ஒன்றில்   ஏற்றிவந்த நிலையில் பவுசரில் மோதிய விபத்தில்  தம்பி உயிரிழந்ததுடன் அண்ணன்  உயிர் தப்பியுள்ளார்.

இதனையடுத்து பவுசரின் சாரதி மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பி ஓடியதையடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் தண்ணீர் பவுசர் மீது தீவைத்ததையடுத்து பவுசர்  முற்றாக தீயில் எரிந்து சாம்பலாகியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்ட நிலையில் தப்பி ஓடிய சாரதி மற்றும் உதவியாளர் இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்ததுடன் இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையிவல் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுபாட்டிற்கு கொண்டுவந்ததுடன் மடக்கி பிடித்த சாரதி மற்றும் உதவியாளர்களை கைது செய்ததுடன் உயிரிழந்த சிறுவனின் சடலத்தை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த மண்யாட் சட்டவிரோதமாக அனுமதி எதுவும் இன்றி இயங்கி வருவதாகவும் இதற்கு எதிராக பிரதேச மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்தபோதும் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது