( வாஸ் கூஞ்ஞ)
குற்றச் செயல் தொடர்பாக பொலிசார் சந்தேக நபர்களை விசாரனை செய்வதற்காக வீடு தேடி சென்றபோது அவ்வீட்டிலிருந்த ஆண்கள் பெண்கள் இணைந்து பொலிசார் மீது தாக்குதல் நடாத்தியமையால் பொலிசார் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஆண்கள் பெண்கள் உட்பட பத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (24) உயிலங்குளம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது
சனிக்கிழமை (24) மhலை 4.30 மணியளவில் உயிலங்குளம் மதுபானசாலை அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சிலர் உயிலங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து உயிலங்குளம் பொலிஸ் கோஷ்டினர் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று விசாரனை செய்ததுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கு நின்றவர்கள் இனம் காட்டியுள்ளனர்.
இதற்கமைய பொலிசார் சந்தேக நபர்களை விசாரனை செய்வதற்கு அவர்களின் வீட்டை நோக்கிச் சென்றிருந்தபொழுது பொலிசார் மீது அவ்வீட்டிலிருந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் பொலிசார் காயங்களுக்கு உள்ளாகி மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஐந்து ஆண்களும் ஐந்து பெண்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மன்னார் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.வினோதன் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி பதில் நீதவான் ரி.விநோதன் கட்டளை பிறப்பித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சில மாதங்களுக்கு முன் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் நடைபெற்ற இரட்டைகச் கொலையில் மரணித்தவர்களின் உறவினர்கள் என்றும் பொலிஸ் விசாரனையில் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.