திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
மேன்முறையீகள் செய்த விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாரை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் நலன்புரி நன்மைகள் சபையின் பெயர் பட்டியலில் பெயர் இடம்பெறாத மக்களின் மேன்முறையீட்டு விண்ணபங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கான மீள்பரிசீலனைகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசினால் கடந்தவாரம் வெளியீடப்பட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவுகள் வழங்கும் பெயரப் பட்டியலில் தமது பெயர்கள் இடம்பெறாது அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு வருகைதந்திருந்த மக்கள் அதற்கான காரணங்களை பிரதேச செயலாளரிடம் கோரி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்த அவர்களுக்கான மேன் முறையீட்டு விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விண்ணப் செய்த விண்ணப்பதாரிகளின் மீள் பரிசீலனைகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரன் அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக
உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந் அவர்களின் நேரடி கண்காணிப்பில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஆகியோரைக் உள்ளடக்கிய ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளுக்கும் தனித் தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசீலனைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான மேன்முறையீட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் வேலைத்திட்டமானது தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதுடன் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் கீழ் இவ் வேலைத்திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படும் என திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்துள்ளா