நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலய தேரோட்டம்

dav

கிழக்கிலங்கையில் நூறு ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான சோபகிருது வருட ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதன்போது வசந்த மண்டப பூசைகள் என்பன இடம்பெற்று பஞ்சமுக விநாயகர் தேரில் அமர்ந்து நூற்றுக்கணக்கில் பக்த அடியார்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர்.

ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான தேரோட்டம் வாழைச்சேனை பேச்சியம்மன் ஆலய வீதி, சேர்மன் கனகரெத்தினம் வீதி, பிரதான வீதி, விபுலானந்தர் வீதி மற்றும் கல்குடா வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.

கடந்த புதன்கிழமை மாம்பழத்திருவிழா, சனிக்கிழமை வேட்டைத்திருவிழா இடம்பெற்று இன்று ஞாயிற்றுக்கிழமை தேர்திருவிழா இடம்பெற்ற நிலையில் நாளை திங்கட்கிழமை ஆனி உத்தர தரிசன தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவுபெறவுள்ளது.

உற்சவ பூசைகள் யாவும் மஹோற்சவ கால பிரதம குரு அலங்கார பூசணம். கிரியா சிவஸ்ரீ.சு.வல்லிகாந்தக் குருக்கள், ஆகமபிரிவினா, பிரதிஸ்டா சாகரம் ‘வாமதேவ சிவாச்சாரியார், ஆர்ச்சார்ய பூசணம் சிவஸ்ரீ சபா பாஸ்கரக் குருக்கள் ஆகியோரால் இடம்பெற்றது.

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றைக் கொண்ட ஆலமாகும் இங்குள்ள மூல விக்கிரகம் கைலாய மலையில் கொண்டுவரப்பட்ட கற்களால் உருவாக்கப்பட்ட ஆலமாகும் .

dav

dav