பாரியளவிலான 4 குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொலிஸ் தலைமையகம் அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை அறிவிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
அந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக,
* போதைப்பொருள்
* திட்டமிடப்பட்ட குற்றங்கள்
* பாரியளவிலான சுற்று சூழல் அழிப்பு
* உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம்.