மன்னார் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிரமதானப் பணியில் ஈடுபட்டதுடன் சுற்று மதில்களுக்கு வர்ணம் பூசி அழகு படுத்தும் செயல்பாட்டில் நானாட்டான் முச்சக்கர வண்டி உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.
இச்செயற்பாடு சனிக்கிழமை (10) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றது.
இந்த சிரமதானப் பணிக்கான அனுசரனையை நானாட்டான் வர்த்தகர் சிலர் வழங்கியதைத் தொடர்ந்து நானாட்டான் முச்சக்கர வண்டி சங்கத்தின் நிர்வாகத்தினரும் உறுப்பினர்களும் சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்.
குறித்த இச்செயல்பாட்டை பொதுமக்களும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் இங்கு இடம்பெற்ற செயல்பாட்டுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.