திருகோணமலை வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு .

திருகோணமலை ரோட்டராக்ட் கழகத்தினர் ஜூன் மாதம் 4ம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரண்டு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.

இந்நிகழ்வில் ரோட்டராக்ட் கழகத்தின் தலைவர் அஜந்திக்கா, செயற்திட்ட தலைவர் அபிநயா ரகுராம் ஆகியோருடன்
வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. ஜகத் விக்ரமரத்ன அவர்களும் ரோட்டரி கழகத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிரதேச முகாமையாளர் திரு. க. பிரபாகரன் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் அதிகாரி ந. து. ரகுராம் கலந்து கொண்டிருந்தனர்.

செய்தித்தாள்களில் சக்கர நாற்காலிகள் தேவை குறித்த செய்தியின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.