வாஸ் கூஞ்ஞ)
கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 144 வது நீலப் பெருஞ்சமரில் கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றதுடன் பரிசளிப்பு விழா சனிக்கிழமை (18) பிற்பகல் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவத் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
-கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார்
.
இதன்போது ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்காவும் கலந்து கொண்டார்.
இன்றைய (18) போட்டி நிறைவில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பரிசளிப்ப விழாவில் கொழும்பு றோயல் கல்லூரியின் அணிக்கு டி.எஸ்.சேனநாயக்க நினைவுக் கேடயம் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.