இந்நாட்டை சோசலிசத்தினாலோ,அல்லது முதலாளித்துவத்தினாலோ கட்டியெழுப்ப முடியாது.சமூக ஜனநாயக கொள்கையே தீர்வு.
வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்பும் அணி எங்களிடம் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.
மேலும் நாட்டைக் கட்டியெழுப்பும் திறமையும் இயலுமையும் ஆற்றலும் கொண்ட அணியினர் ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
நிறுவனங்களுக்குச் சொந்தமான நாட்டில் விவசாயம் செய்யப்படாத பாரியளவிலான காணிகள் பல உள்ளதாகவும்,அது இன்றளவில் பாழ் நிலமாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
தொழிலாளிகளாக உழைக்கும் பெருந்தோட்ட சமூகத்தையும்,இடம் உரித்தற்ற இளைஞர் சமூகத்தையும் சாதி பேதமின்றி ஒன்றாக கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவர்களை இடமொன்றுக்கும் சிறிய தேயிலை தோட்டத்தின் உரிமையாளராகவும் உருவாக்குவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை சுறுக்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும்,இந்நாட்டை சோசலிசத்தினாலோ, அல்லது முதலாளித்துவத்தினாலோ கட்டியெழுப்ப முடியாது எனவும்,சமூக ஜனநாயகப் போக்கொன்றாலே இதை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வலப்பனை பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.