ஜனநாயக மக்கள் காங்கிரஸின் அங்குராப்பண நிகழ்வு நாளை!

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்குராப்பண நிகழ்வு நாளை(சனிக்கிழமை) ​கொழும்பில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் தலைமையிலான இந்த கட்சிக்கு தபால்பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

பலவருட செயற்பாடுகளுக்கு மத்தியில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக அங்கிகாரம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.