மூன்றாம் தவணைக்களுக்காக பாடசாலைகள் நாளை ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளும் நாளை(05) திங்கட்கிழமை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளாக திறக்கப்படவுள்ளன.

தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான முதல்கட்டம் நாளை(05) திங்கட்கிழமை தொடங்கி 22 டிசம்பர் 2022 அன்று முடிவடைகிறது. 2022 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்வித் தவணையின் இரண்டாம் கட்டம் 2023 ஜனவரி 02 முதல் 20 வரை ஆகும். 2022 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்வித் தவணையின் மூன்றாம் கட்டம் 20 பெப்ரவரி 2023 முதல் 24 மார்ச் 2023 வரை நடைபெறவுள்ளது.

முஸ்லிம் பள்ளிகளுக்கு:
2022 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்வித் தவணையின் முதல் கட்டம் நாளை(5) முதல் 22 டிசம்பர் 2022 வரை. 2022 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்வித் தவணையின் இரண்டாம் கட்டம் 2023 ஜனவரி 2 முதல் பெப்ரவரி 15 வரை. 2022 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் கல்வித் தவணையின் மூன்றாம் கட்டம் 1 முதல் 21 மார்ச் 2023 வரை.