(பெரு நிலத்தான்) அண்மையில் வெளியாகிய கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவர் 9 ஏ சித்திகளை பெற்று வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் தவராஜா யக்சாஜினி என்ற மாணவியே ஒன்பது பாடங்களிலும் ஏச்சிதிகளை பெற்று வரலாற்றை சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதேவேளை குறித்த பாடசாலையில் கல்வி கற்ற மேலும் இரு மாணவர்கள் 8A, B சித்திகளை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது