மடு விழாவுக்கு வாகனங்களில் வருவோர் தங்களுடன் எரிபொருள் கொண்டு வரும் பட்சத்தில் இதன்மட்டில் கவனம் செலுத்தவும் அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்.

(வாஸ் கூஞ்ஞ) 

மடு பெருவிழாவுக்கு அதிகமானவர்கள் வருகை தந்து கூடாராங்கள் அமைத்து விறகுகளில் சமைத்து வருவதால் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வருவோர் தங்களுடன் எரிபொருளையும் கொண்டு வருவதால் தீ பற்றாத நிலையில் எரிபொருளை மிகவும் பாதுப்புடனும் பௌத்திரமாகவும் வைத்திருக்க வேண்டும் என மன்னார் அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

ஆவணி (15.08.2022) மடுத் திருவிழா தொடர்பாக மன்னார் அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரும் 15 ந் திகதி (15.08.2022) நடைபெற இருக்கும் மடு அன்னையின் திருவிழா தொடர்பான முன்னேற்பாடான மீளாய்வுக் கூட்டம் செவ்வாய் கிழமை (09.08.2022) மடுத்திலத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையுடன் இணைந்து திணைக்களத் தலைவர்கள் அனைத்து பாதுகாப்பு தரப்புடன் இணைந்து கூட்டத்தை நடாத்தி இருந்தோம்.

இதன் அடிப்படையில் இம்முறை அதிகமான பக்தர்கள் இவ் ஆவணி பெருவிழாவுக்கு வருகை தர இருப்பது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தற்பொழுதுள்ள சூழலில் கொவிட் 19 தொற்று நோய் அதிகரித்து வருவது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆகவே இவ் பெருவிழாவுக்கு வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் எரிபொருள் பிரச்சனையும் காணப்படுகின்றது. பெரும்பாலும் வெளி மாவட்டங்களிலிருந்து இங்கு வருவோர் தங்கள் வாகனங்களில் திரும்பிச் செல்வதற்காக உங்கள் வாகனங்களில் கேன்களில் எரிபொருள் கொண்டு வரும் நிலை ஏற்பட்டால் அவற்றை இங்கு மிகவும் பாதுகாப்பாக பௌத்திரமாக வைத்திருக்க வேண்டிய நிலை இருக்கின்றது.

மக்கள் மடுத் தேவாலாய வளாகத்துக்குள் அதிகமான கூடாரங்களை அமைத்திருக்கின்றார்கள். இங்கு அதிகமானவர்கள் விறகுகளின் மூலமே தங்கள் சமையல் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே தங்களுடன் கொண்டுவரப்படும் எரிபொருளை மக்களுக்கு அருகாமையில் வைத்துக்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்காது.

ஆகவே தங்களுடன் கொண்டு வரப்படும் எரிபொருளை மிகவும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றோம்.

இவ் விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் திணைக்களங்களுடன் இணைந்து திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்து நிற்கின்றோம் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.