நாடாளுமன்றத்திற்கு வந்த கோட்டாவை வெளியேறக்கோரி சபையில் போராட்டம் !
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரதமரின் உரை உள்ளிட்ட சபை அமர்வுகளை அவதானிப்பதற்காக முன்னறிவிப்பு இல்லாமல் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக கோஹோம்கோட்டா என கோஷமிட்டு எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.