நேற்றைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்ற நிலையில் எரிபொருட்களின் விலையில் பாரிய உயர்வு ஏற்பட்டுள்ளது மக்கள் விலை வாசியை கண்டித்து விதிகளில் இறங்கி போராடும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த விலை அதிகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலிய கூட்டுதாபனம், பெற்றோலுக்கான விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 373 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 329 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.