ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியது
அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 உறுப்பினர்களும் சுயேச்சை உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரத்ன, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.