மனித உரிமைகளை மீறி செயற்படும் இலங்கையர்களுக்கு உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும்

மனித உரிமைகளை மீறி, செயற்படும் இலங்கையர்க்கு எதிராக உலக நாடுகள் தடைகளை விதிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகொள் விடுத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முரணாக காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமக்கான நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் ஐக்கிய நாடுகளையும் சர்வதேசத்தையுமே நம்பியுள்ளதாகவும், இலங்கையில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட, உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தி உள்ளார்.