எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு ஏற்படாது: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மின்சார சபைக்கு எதிர்வரும் 10 நாட்களுக்கு தேவையான எரிபொருளை வழங்கவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்திற்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.