வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு

(திருமலை தட்சாயினி ஞானசங்கரன்)

திருகோணமலை காப்போம் அமைப்பினரால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசத்திற்குட்பட்ட அன்புவழிபுரம் , வரோதய நகர் கிராமங்களைச் சேர்ந்த நெருக்கடியான பொருளாதார சூழலிலும் திறமையாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு தெரிவு செய்யப்பட்ட 13 மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு  திருகோணமலை அன்புவழிபுரம் இடத்தில் நடைபெற்றது.

திருகோணமலை காப்போம் அமைப்பின் ஸ்தாபகரும் , இயக்குனருமான திலீப் தலைமையில் கோவிட் சுகாதார வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீர்வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் திரு.பா.குணசாந்தன்
கலந்து சிறப்பித்தார்.

நிகழ்விற்கான நிதி உதவியினை லண்டனில் வசிக்கும் மேரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.