அம்பாறையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

அம்பாறை − தமன பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை டிப்பர் – கார் மோதி இடம்பெற்றகோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.