மத்திய வங்கியில் ஒன்றும் இல்லை. அது காலியாக உள்ளது : ரணில் விக்கிரமசிங்க

இலங்கை மத்திய வங்கியில் ஒன்றும் இல்லையென்றும் அது காலியாக உள்ளது என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று மத்திய வங்கி காலியாக இருக்கிறது. 2 பில்லியன் ரூபா கூட பணம் இல்லை என்று நினைக்கிறேன்.

பங்களாதேஷிலிருந்து பணம் வாங்குகின்றனர். இந்தியாவிடம் பெற்றுக் கொண்டு அங்கும் கேட்கின்றார்கள். இது சரிபட்டு வராது. மத்திய வங்கி நன்றாக இருந்தால், ஏன் முன்னாள் ஆளுநரை வைத்திருக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது என தெரிவித்த அவர் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.