நாமல் ராஜபக்ஷ இளைஞர் யுவதிகளிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

கோவிட்  தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் இளைஞர் யுவதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி பெற்றுக் கொள்பவர்களில் 20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்டவர்களின் சதவீதம் குறைவாக காணப்படுவது தொடர்பாக, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், தாய்நாட்டின் வளர்ச்சியில் இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியப்பாடு தொடர்பிலும் அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.