மகனின் விடுதலைக்காக நாமல் ராஜபக்ஷவிடம் கண்ணீர் விட்டு அழுத தாய்!!

(மட்டக்களப்பு விசேட நிருபர்)
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறுகோரியும், உடனடியாக இதற்கு தீர்வு ஒன்றை சொல்லிவிட்டு போகுமாறும் தாயொருவர் கண்ணீர்விட்டு அழுத சம்பவம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்களை  மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்கும், மேற்கொள்ளப்படவுள்ள மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில்  ஆராய்வதற்காகவும் மட்டக்களப்பிற்கு வருகைதந்துள்ள அமைச்சர்  நாமல் ராஜபக்ஷ அவர்களிடமே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிக்குமாறு குறித்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வந்தாறுமூலையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போதே நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு மாலை அணிவித்து தனது மகனுக்காண தீர்வினை இவ்விடத்திலே பெற்றுத்தந்துவிட்டுப் போகுமாறு அவர் கண்ணீருடன் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.