கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள்

கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளை சுகாதார அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கருப்பு பூஞ்சை நோய்க்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பகுதிகளை பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் வெளிப்படுத்தினார்.

இதன்படி, கொழும்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஈகிய பகுதிகளில் இருந்து கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் இதுதொடர்பில் குறிப்பிட்டபோது, கறுப்பு பூஞ்சை என்பது சுற்றாடல் சார்ந்த நோயாகும். இது குறித்து அனைத்து மக்களும் அவதானமாக இருக்க வேண்டும்.

முகத்தில் அல்லது உடலில் வித்தியாசமான ஏதேனும் பருக்கள் அல்லது அடையாளங்கள் ஏற்பட்டால் உடனே வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறும்  அவர் தெரிவித்துள்ளார்.