நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நீண்ட காலத்தின் பின்னர் மதுபானசாலைகள் திறக்கப்படவுள்ளதால், அதிகளவான வாடிக்கையாளர்கள் ஒன்றுகூடுவது தடை செய்யப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிக வாடிக்கையாளர்கள் கூடுவதை தடுப்பதற்கு சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் மதுவரி திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.