பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் போதுமான அளவு நெல்லை சந்தைக்கு விநியோகிக்காத காரணத்தால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதனால் அரிசி விலை அதிகரிக்கப்பட்டதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நிர்ணயம் செய்த விலையில் சந்தைக்கு அரிசியை விநியோகிப்பதாக உறுதியளித்திருந்த நெல் ஆலை உரிமையாளர்கள் அதனை கடைப்பிடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில், அரசாங்கம் தவறான பொருளாதார முகாமைத்துவ கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சிலர் கருத்து வெளியிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.