பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டாவேரியன் இதுவரையில் உத்தியோகபூர்வமான கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தும் தொற்றுமுறையினையும் மரண எண்ணிகையினையும் பார்க்கும்போது டெல்டாவேரியன் மட்டக்களப்பில் இருப்பதற்கான சாத்தியம் அதிகளவில் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 303கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொரனா நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 303கொரனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 106பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38பேரும்,வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27பேரும்,செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25பேரும்,வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22பேரும்,ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15பேருமாக 303பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.கோறளைப்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 152கொரனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன.மூன்றாவது அலையில் 143மரணங்கள் ஏற்பட்டுள்ளன.20வயதுக்குட்பட்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 651கட்டில்கள் இடைத்தங்கள் முகாம்களில் தயார் நிலையில் உள்ளது.சிகிச்சை நிலையங்களில் 116கட்டில்கள் தயார் நிலையில் உள்ளது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 124கட்டில்கள் உள்ளன.தற்போதுவரையில் எந்தவித ஒட்சிசன் தட்டுப்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இல்லை.அவசர சிகிச்சை பிரிவு வசதிகளை பொறுத்தவரையில் காத்தான்குடி வைத்தியசாலையில் 06கட்டில்களும்,களுவாஞ்சிகுடி,
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் சிறுசிறு கொத்தனிகள் உருவாகுவதற்கு ஒன்றுகூடல்களே காரணமாகயிருந்தன.மரண வீடுகள்,கோவில்களுக்கு சென்றுவந்தவர்கள்,திருமண வீடுகளுக்கு சென்றுவந்தவர்கள்.எனவே ஒன்றுகூடல்களை முற்றாக தவிருங்கள்.ஒன்றுகூடுவதை முற்றாக தவிர்ப்பதன் மூலமே மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றுநோயை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும்.மிகவும் தேவையிருந்தால் மட்டுமே வீட்டினை விட்டு வெளியில் செல்லுங்கள்.சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றுக்குள்ளானவர்களை வீட்டில்வைத்து பராமரிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.வீ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிலர் வெளியில் வர்த்தக நிலையங்களுக்கு சென்றுவரும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.பொதுமக்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசிகளைப்பொறுத்தவரையில் 266000தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.30வயதுக்கு மேற்பட்ட 91வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது.இரண்டாம் கட்டத்தில் 61800தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இது 30வயதுக்கு மேற்பட்ட 21வீதமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றது.இன்னும் 50ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்குமானால் 30வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கல் பூர்த்தியடையும்.மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டாவேரியன் இதுவரையில் உத்தியோகபூர்வமான கண்டுபிடிக்கப்படவில்லை.இருந்து