மட்டக்களப்பில் பிரபல சட்டத்தரணி கொவிட்டுக்கு பலி.இ.கி.மிசனில் 40பேருக்கு தொற்று.

மட்டக்களப்பில் பிரபலசட்டத்தரணியொருவர் கொரனா தொற்றுக்குள்ளாகி 12நாட்களின்பின் சற்று நேரத்திற்குமுன் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் கொண்ட பிரபல சட்டத்தரணி கே .பேரின்பராஜா என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் ஆச்சிரமத்தில்  இரு சுவாமிகள் உட்பட 40பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் இன்று மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனைகளின்போது மாமாங்கப்பகுதியில் 21பேருக்கும்  புளியந்தீவுக்பகுதியில் 9பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

நேற்றும்  மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றுக்குள்ளாகி 03பேர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.