பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரி மற்றும் சிலோன் மீடியா போர பிரதிநிதிகளிடையே சந்திப்பு.

(எஸ்.அஷ்ரப்கான்) பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய ஊடக பிரதானி ஹல்சூம் கைஸர் ஜிலானி அவர்களுக்கும் சிலோன் மீடியா போரத்தினருக்குமிடையிலான சந்திப்பு சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம், தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்குதல் மற்றும் இலங்கை – பாகிஸ்தான் இரு நாட்டு ஊடகவியலாளர்களுக்குமிடையில் பரஸ்பர உறவினை ஏற்படுத்தல் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இதனை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய
ஊடக பிரதானி ஹல்சூம் கைஸர் ஜிலானி இது விடயமாக கூடிய கரிசனை கொள்வதாகவும் மிக விரைவில் இளம் ஊடகவியலாளர்களுக்கு
இலங்கை – பாகிஸ்தான் இரு நாட்டு ஊடகவியலாளர்களுக்குமிடையில் பரஸ்பர உறவினை ஏற்படுத்தல் மற்றும் இதர விடயங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் உறுதியளித்ததுடன், ஊடகவியலாளர் நலனில் மிகவும் அக்கறையுடன் எதிர்காலத்தில் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருள் ஹுதா உமர், ஆசிரியர் சௌபி இஸ்மாயில், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதிச்செயலாளர் கியாஸ் ஏ புகாரி, உதவிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.