(ரக்ஸனா)
மட்டக்களப்பு – ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மற்றுமொரு கடல் ஆமை.
அண்மைக்காலமாக கிழக்குக் கடற்கரையிலும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்ற இந்நிலையில் திங்கட்கிழமை(28) மாலை மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதை கடற்கரையில் நின்றவர்கள் அவதாளித்துள்ளனர். இவ்விடையம் தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணக்களத்தினருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அதன் உத்தியோகஸ்த்தர்கள் இஸ்த்தலத்திற்கு விஜயம் செய்து ஆமையை பார்வையிட்டு பரிசோதனைகளுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.