கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் கடற்கரைப்பிரதேசங்களில் பரவலாக இறந்த கடலாமைகள் டொல்பின்கள் மீன்கள் கரையொதுங்கிவருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு திருக்கோவில் பிரதேச கடலில் கடலாமைகள் மற்றும் மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன.
அண்மையில் கொழும்புக்கடலில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ்பேர்ள் கப்பல் தீப்பற்றலினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாகவே நாட்டின் பல இடங்களில் இவ்வாறு கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாகக்கூறப்படுகிறது. இதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் கடல்மீன்களை தவிர்த்துவருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டத்தின் கடற்கரைகளை அண்டிய பகுதிகளிலும் உயிரிழந்த நிலையில் ஆமைகள்டொல்பின் மீன்கள் கரையொதுங்கி வருகின்றன.
கிரான்குளம்தாழங்குடாபுதுக்கு
கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்இமத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன்இஇறந்த நிலையில் பலத்த காயங்களுடன் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தின் பிராந்திய சுற்றுவட்ட உத்தியோகத்தர் நாகராசா சுரேஸ்குமார் பார்வையிட்டதுடன், பகுப்பாய்வி
கடந்த 21 ஆம் திகதி பேர்ள் கப்பல் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.