குச்சவெளிக்கு   ரூபா  250,000.00 பெறுமதியான   உலர் உணவு வழங்கல்

  ..!
(ஹஸ்பர் ஏ ஹலீம் )

திருகோணமலை மாவட்டத்தின் , குச்சவெளி உதவிப்  பிரதேச செயலாளரது  வேண்டுகோளுக்கு அமைய,  அப்பிரதேச செயலாளர் பிரிவில்  கோவிட் -19 தோற்றுக்   காரணமாக இன்னலும் மக்களுக்கு வழங்கும் பொருட்டாக  250,000.00 பெறுமதியான உலர்  உணவுப் பொருட்களைத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு .சண்முகம் குகதாசன் அவர்கள் நேற்று மாலை (04)குச்சவெளி உதவிப்  பிரதேச செயலாளர்  பாமா இராசரத்தினம்   அவர்களிடம் கையளித்தார்.

இதற்கான அனுசரணையைக்  கனடாத் திருகோணமலை நலன்புரிச் சங்கச் செயற்குழு     உறுப்பினர்களான   ச.இராசதுரை(வாசு) எஸ். திருச்செல்வம் ஆகியோர் வழங்கி இருந்தனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.